இலங்கைத்தீவின் வடபால் வவுனியா மாவட்டத்தின் மேற்கே நெல் வயல்களும் சோலைகளும், களனிகளும் தன்னகத்தே கொண்ட பாலாமைக்கல் எனும் கிராமத்தில் கோயில் கொண்டு வேண்டுபவர்க்கு வேண்டுவதை ஈந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு நிகளும் மங்களகரமான மன்மத வருடம் சித்திரை 26ம் நாள் (09.05.2015) சனிக்கிழமை சஷ்டி திதியும் பூராட நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபவேளையில்யில் ஆரம்பமாகி வைகாசி 4ம் நாள் (18.05.2015) திங்கட் கிழமை வரை இனிதே நடைபெறுவதற்கு அம்பாள் அருள்பாலித்துள்ளார்.
08.05.2015 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு அனுக்ஜை, கணபதிஹோமம், வாஸ்த்து சாந்தி.
18.05.2015 திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு அஸ்டோத்திரசங்காபிஷேகம், விசேட பூசையும் மாலை 5.00 மணிக்கு விசேட வசந்தமண்டபபூஜை, நவசக்தி அர்சனை, ஊஞ்சல், கிராம ஊர்வலம்
19.05.2015 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு வைரவர் சாந்தி என்பன நடைபெறவுள்ளன.
இக்காலத்தில் தடைபெறுகின்ற அபிசேக, ஆராதனை, அன்னதான நிகழ்வுகளில் அடியார்கள் பங்குபற்றி அம்பாளின் அருட்கடாட்ஷத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக் கொள்கின்றனர்.
-பா.கதீஸன்-