ஜம்பவான்களின் T20 தொடரில் ஜெயவர்த்தன, சங்கக்காரா : லாரா தகவல்!!

258

sanga

சச்சின், ஷேன் வோன் இணைந்து நடத்தும் புதிய T20 தொடரில் இலங்கை நட்சத்திர வீரர்களான ஜெயவர்த்தன, சங்கக்காரா விளையாட வாய்ப்பிருப்பதாக பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ‘மாஸ்டர்ஸ் பிரிமியர் லீக்- T20’ என்ற தொடரை முன்னாள் ஜம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷேன் வோன் இணைந்து நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த தொடருக்கு சச்சின், ஷானேஷேன் வோன், கில்கிறிஸ்ட், ரிக்கி பொண்டிங், மெக்ராத், பிரெட் லீ, ஜேக் கலீஸ், நில் மெக்கன்சி, பிளிண்டொப் உள்ளிட்ட 28 வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிகாகோ ஆகிய நகரங்களில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. அடுத்த மூன்றரை ஆண்டுகளில் மொத்தம் 15 T20 ஆட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இந்த போட்டி தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனை துபாயில் சந்தித்து சச்சின் டெண்டுல்கர் பேசினார்.

இது தொடர்பாக லாரா கூறுகையில், இந்த புதிய T20 தொடருக்கு ரசிகர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். அதே போல தங்களுக்கு விருப்பமான ஹீரோக்களுக்கும் ஆதரவு தெரிவிப்பார்கள்.

இதில் முன்னாள் அணித்தலைவர்களான பொண்டிங், சங்கக்கார, ஜெயவர்த்தன ஆகியவர்கள் விளையாட வாய்ப்பிருக்கிறது. இந்த தொடர் ஓய்வு பெற்றவர்களுக்கும் அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறிது காலம் நிலைத்து இருக்க உதவும் என்று கூறியுள்ளார்.

பொண்டிங், சங்கக்கார, ஜெயவர்த்தன ஆகியவர்கள் இந்த தொடரில் விளையாடுவதற்கான ஒப்பந்தம் இன்னும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.