பேஸ்புக் மோகம் : பெற்றோர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்த மாணவி!!

307

Fb

பேஸ்புக்கிற்கு நீண்டகாலமாக அடிமையான மாணவியொருவர் தனது பெற்றோரை பொலிஸ் நிலையம் வரை அழைத்துச் சென்ற சம்பவம் வெள்ளவத்தையில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த சர்வதேச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியொருவர், பேஸ்புக் மூலம் நண்பர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி வந்துள்ளார்.

குறித்த மாணவியின் நடவடிக்கைகளை அவதானித்த அவரது பெற்றோர், மாணவியை அடித்துக் கண்டித்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த மாணவி பெற்றோருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்வரும் 30ம் திகதி மாணவியின் பெற்றோரை நீதிமன்றத்திற்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.