கிளிநொச்சியில் பாடசாலை மாணவிகள் மூவரை காணவில்லை!!

530

Missing

கிளிநொச்சியில் பாடசாலை மாணவிகள் மூவரை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் பயிலும் மாணவிகனே காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைக்கு சென்ற தங்களது பிள்ளைகள் வீடு திரும்பவில்லையென அவர்களது பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

பாரதிபுரத்தை சேர்ந்த யோகலிங்கம் விதுஷிகா, மலையாளபுரத்தை சேர்ந்த திருவருள் விஷாந்தி மற்றும் கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை சுதர்சினி ஆகிய மூவருமே காணாமற்போயுள்ளனர்.

பெற்றோர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.