வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற யாத்திரை தலமான பெரியகட்டு புனிதஅந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் திருச்சொரூப பவனி இன்று (02.08.2015)ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
காலை முதல் ஆராதனைகள் மற்றும் திருப்பலி ஒப்புகொடுக்கபட்டு இறுதியில் திருசொரூப பவனி இடம்பெற்றது .
இந்த திருச்சொருப பவனியில் ஆயிரக்கணக்கான அடியார்கள் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டிருந்தனர் .
இந்த ஆலயமானது யாத்திரை தலமாக 1949 இல் அரசினால் பிரகடனப்படுத்தபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
பெரிய கட்டு புனித அந்தோனியார் ஆலயத்தின் புனர்நிர்மான வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.ஆலயத்தின் கட்டுமான பணிகளில் ஆர்வமுடைய அடியார்கள் ஆலயத்துடன் தொடர்புகொண்டு தங்களது நன்கொடைகளை வழங்க முடியும் .
வவுனியா நெற் செய்திகளுக்காக சாண்டோ