வவுனியா செட்டிகுளம் பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருச்சொரூப பவனி! (படங்கள் காணொளி)

1073

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற யாத்திரை தலமான  பெரியகட்டு புனிதஅந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் திருச்சொரூப பவனி இன்று (02.08.2015)ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

காலை முதல் ஆராதனைகள்  மற்றும் திருப்பலி ஒப்புகொடுக்கபட்டு இறுதியில் திருசொரூப பவனி இடம்பெற்றது .

இந்த திருச்சொருப பவனியில் ஆயிரக்கணக்கான அடியார்கள்  மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டிருந்தனர் .

இந்த ஆலயமானது  யாத்திரை தலமாக 1949 இல் அரசினால் பிரகடனப்படுத்தபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

பெரிய கட்டு புனித அந்தோனியார் ஆலயத்தின் புனர்நிர்மான  வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.ஆலயத்தின் கட்டுமான பணிகளில் ஆர்வமுடைய   அடியார்கள்  ஆலயத்துடன் தொடர்புகொண்டு தங்களது நன்கொடைகளை வழங்க முடியும் .

வவுனியா நெற் செய்திகளுக்காக சாண்டோ

20150802_081911 20150802_081921 20150802_082425 20150802_082529 20150802_082537 20150802_083107 20150802_083118 20150802_083229 20150802_083235 20150802_083328 20150802_083334 20150802_083400 20150802_092326 20150802_092752 20150802_092809 20150802_092832 20150802_092840 20150802_092844 20150802_092949 20150802_093005 20150802_093009 20150802_093925 20150802_093947 20150802_093955