இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளுக்கிடையே 4 வருடங்களிற்கு ஒரு முறை கொமன் வெல்த் போட்டி நடத்தப்படும். இந்த போட்டியை இங்கிலாந்து மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தொடங்கி வைப்பார்.
அடுத்த கொமன்வெல்த் போட்டி 2018-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறுகிறது. அதன்பின் 2022-ஆம் ஆண்டு போட்டியை நடத்தும் நகரை தேர்ந்தெடுப்பதற்கான கொமன்வெல்த் கூட்டமைப்பின் பொதுக்கூட்டம் நேற்று நியூஸிலாந்தில் நடைபெற்றது.
இதில் தென்னாபிரிக்காவின் கடற்கரை பகுதியான டர்பன் நகர் இப்போட்டியை நடத்துவதற்கு தகுதிபெற்றது. டர்பனுடன் கனடாவின் எட்மோன்டன் நகரும் போட்டியில் இடம் பெற்றிருந்தது.
கடந்த பெப்ரவரி மாதம் எண்ணெய் விலை கணிசமாக குறைந்ததால் அந்த நகர் போட்டியில் இருந்து விலகியது. இதனால் தென்னாபிரிக்காவின் டர்பன் நகர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
1930ஆ-ம் ஆண்டு முதல் கொமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறன. ஆனால் கொமன்வெல்த் போட்டியை நடத்தும் வாய்ப்பு இப்போதுதான் முதன் முறையாக தென்னாபிரிக்காவிற்கு கிடைத்துள்ளது.