சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு இன்று(01.10.2015) காலை புதிய வீட்டுத்திட்டம் மணிப்புரம் ஸ்ரீ துர்க்கை அம்மன் முன்பள்ளியில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகளில் முன்பள்ளியின் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா கலந்து கொண்டு சிறுவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.
இன் நிகழ்வுகளில் கிராமசேவையாளர் நசர், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டனர். சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
வவுனியா சின்னப்புதுக்குளம் வாணி முன்பள்ளியில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகளில் வவுனியா சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி, கிராமசேவையாளர் வேலுப்பிள்ளை மற்றும் சதாசகாயமாதா முன்பள்ளி மாணவர்களும் இணைந்து இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.