வவுனியா குஞ்சுக்குளம் பண்டாரவன்னியன் வித்தியாலத்தில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு தமிழ் விருட்சம், மற்றும் பாடசாலை சமுக ஏற்பாட்டில் கனடா ராம் சிவா மற்றும் அவர் பிள்ளைகள் ஜனேஸ், ஜனித் அனுசரணையில் நேற்று முன்தினம்(01.10.2015) நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் இ.அருந்தவலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுபினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜ் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும் ,
சமுர்த்தி உத்தியோகத்தர் யோ.தமிழ் குமரன், தேசபந்து இ.கௌதமன், ஆரம்பக் கல்வி விளையாட்டு இணைப்பாளர் இ.பகிரதன் ஆகியோர் சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் நிகழ்வு ஏற்பாட்டாளர்களான தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் மற்றும் பிரதி அதிபர், ஆசிரியர் பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.