மூக்கிற்கு பதிலாக முகத்தில் இரு குழாய் போன்ற கட்டமைப்புகளுடன் அதிசய குழந்தையொன்று பெருவில் பிறந்துள்ளது.பெருவின் தலைநகர் லிமாவிலிருந்து 300 மைல் தொலைவில் சிம்பொத் நகரிலுள்ள டெல் நினோ மருத்துவமனையில் லொறினா ரொட்றிகுயஸ் ஸவலெதா (20 வயது) என்ற பெண்ணுக்குப் பிறந்த இந்தக் குழந்தை ஆரோக்கிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி குழந்தைக்கு ஏற்பட்ட பதாயு நோய் அறிகுறி என அழைக்கப்படும் மரபு ரீதியான பாதிப்புக் காரணமாகவே இவ்வாறு குழாய் உருவில் மூக்கு உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறான மரபணு பாதிப்பு 15,000 குழந்தைகளுக்கு ஒன்றென நிகழும் அபூர்வ நிகழ்வாகும்.