தமிழில் ‘கேடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இலியானா. ‘நண்பன்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார். இந்தி, தெலுங்கு பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவுக்கும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.
இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களும் இணைய தளங்களில் பரவின. ஆண்ட்ரூ புகைப்பட கலைஞராக இருக்கிறார். இலியான சமீப காலமாக புதுப்படங்களில் ஒப்பந்தமாகவில்லை. காதலருடன் ஜாலியாக சுற்றி திரிந்தார்.
இந்த நிலையில் இலியானாவுக்கும் ஆண்ட்ரூவுக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலியானா தனது விரலில் விலை உயர்ந்த மோதிரம் அணிந்து இருக்கிறார். இந்த மோதிரம் நிச்சயதார்த்ததின் போது ஆண்ட்ரூ அணிவித்தது என்று கூறப்படுகிறது.
திருமண நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர், நடிகைகள் யாரையும் அழைக்கவில்லை என்கின்றனர். இலியானா- ஆண்ட்ரூ திருமணத்தை 3 மாதத்தில் முடிக்க இரு வீட்டு பெற்றோரும் முடிவு செய்துள்ளதாக இந்தி பட உலகில் பேச்சு அடிபடிகிறது.