வவுனியா தோணிக்கல் ஜீனியஸ் பாலர் பாடசாலையின் கண்காட்சி நிகழ்வு நேற்று (04.10.2015) ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் பாலர் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது,
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா அவர்களும் சிறப்பு விருந்தினராக வவுனியா நகரசபை முன்னை நாள் உபநகரபிதாவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் பண்டாரிகுளம் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி, பாலர் பாடசாலை அபிவிருத்தி குழு அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் போது வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா அவர்களின் 2015 ஆம் ஆண்டிற்கான மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் 25,000 ரூபாய் பெறுமதியான தளபாடங்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.