வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் பிரண்ட்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய 20-20 மென்பந்து கிரிகெட் போட்டிகளின் இறுதிபோட்டி நேற்று முன்தினம் (04.10.2015) ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது .
மேற்படி போட்டியில் பிரண்ட்ஸ் விளையாட்டு கழகம் யங்ஸ்டார் விளையாட்டு கழகம் என்பன மோதிகொண்டன . மேற்படி இறுதிபோட்டியில் பிரண்ட்ஸ் விளையாட்டு கழகம் வெற்றி பெற்று சம்பியனானது .
மேற்படி 20-20 மென்பந்து கிரிகெட் போட்டிகளில் வவுனியாவிலிருந்து 30 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் :சந்திரபிரகாஷ்