யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் மோதுண்டு முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.சோமசுந்தரம் வீதியின் 392ஆவது மைல் கல் அருகே இன்று (07.10.2015) புதன்கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தில், குருநகரைச் சேர்ந்த ஏனோல்ட் (வயது 62) என்ற முதியவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம், நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.