சிறுமி சேயா வழக்கு : கொண்டைய்யாவின் டீ.என்.ஏவும் ஒத்துப்போகவில்லை!!

624

Kondaya

சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கொண்டைய்யா எனப்படும் துனேஷ் பிரியஷாந்த என்பவரின் டீ.என்.ஏ குற்றத்துடன் ஒத்துப் போகவில்லை என, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கொடதெனியா பகுதியில் ஐந்து வயது சிறுமியான சேயா துஷ்பிரயேகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் 17 வயது மாணவன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

பின்னர் கொண்டையா என அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்த என்பவர் கைதானதோடு தானே கொலை செய்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து குறித்த கொலை தொடர்பில் கொண்டைய்யாவின் சகோதரர் கைதுசெய்யப்பட்டார்.

இவரும் தானே அந்தக் கொலையை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அண்மையில் தெரிவித்தனர்.

இந்தநிலையில் கொண்டையாவின் டீ.என்.ஏ குற்றத்துடன் ஒத்துப் போகவில்லை என, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் முன்னதாக கைதான சிறுவன் உள்ளிட்ட இருவரின் டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கை குற்றத்துடன் ஒத்துப் போகாமையால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.