அனைவரையும் கண்ணீர் விட வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

253

isai001

வாலி, குஷி, நியூ என தொடர் வெற்றி படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பின் மீது கொண்ட ஆசையால் சில காலம் இயக்கத்திற்கு விடைக்கொடுத்தார்.பின் மீண்டும் இவர் இயக்கி நடித்த இசை திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் தற்போது இவர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் இறைவி படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அழுது நடிப்பது போல் ஒரு காட்சியாம், இதில் நடித்த எஸ்.ஜே.சூர்யா, படப்பிடிப்பில் இருந்த அனைவரையும் தன் நடிப்பால் அழ வைத்து விட்டாராம்.இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் கண்டிப்பாக ஒரு நல்ல இடம் காத்திருக்கின்றது என அனைவரும் கூறினார்களாம்.