பாரிஸ் குண்டுதாரியை பிடித்து தானும் உயிரை விட்ட ஹீரோ நாய்!!

334

D

நேற்றைய தினம் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள, தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் பதுங்கி இருந்த 10க்கும் மேற்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளை பிரெஞ்சுப் பொலிசார் சுற்றிவளைத்தார்கள்.

அங்கே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. பல தீவிரவாதிகள் ஏகே 47 ரக துப்பாக்கிகளை கொண்டு பொலிசாரை தாக்கினார்கள்.
குறித்த வீட்டுக்குள் செல்ல முன்னர் , அங்கே பொறிவெடி ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க டீசல் என்னும் மோப்ப நாய் குட்டியை பொலிசார் அனுப்பியுள்ளார்கள். அதுவும் வெடி குண்டு மணக்கும் திசை நோக்கிச் சென்றுள்ளது.

ஆனால் தன்னை நோக்கி பொலிசாரும் நெருங்கி வந்ததாக நினைத்த தீவிரவாதி(பெண்) உடனே வெளியே வந்து ஏகே 47 ரக துப்பாக்கியால் சுட்டு, பின்னர் வெடிகுண்டு ஜக்கெட்டை வெடிக்கவைத்துள்ளார்.

இதனால் டிசல் என்னும் இந்த மோப்ப நாயும் துண்டு துண்டாக சிதறி இறந்து போனது. இதனால் பொலிசார் பெரும் கவலையில் உள்ளார்கள். குறித்த இந்த மோப்ப நாய் இல்லாவிட்டால் , அப்பென் பொலிசாரிடம் வந்து குண்டை வெடிக்கவைத்து இருப்பார். இதனால் பலர் இறக்க நேரிட்டு இருக்கும் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

 12107742_1463542707006654_946118731155895232_n 12227226_1463542690339989_4486364062286212628_n 11986420_1463542747006650_7574125198871399136_n