தேசிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் கீழ் “வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம்” 15000 கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலகப்பிரிவின் கூமாங்குளம் கிராமத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அறநெறிப்பாடசாலை திறப்புவிழா ஆலயத் தலைவர் திரு.ஆ.ஆறுமுகம் அவர்களின் தலைமையில் நேற்று (25.11.2015) திகதி புதன்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிசோர், கூமாங்குளம் கிராம சேவகர் திரு.தவராசா, அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.கமலாம்பிகை, அஸ்திரம் மக்கள் நற்பணி மன்ற தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான S.P.சுதர்சன், கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் திரு.மா.புஸ்பராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் ஆலய பரிபாலன சபையினர், கூமாங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், அஸ்திரம் மக்கள் நற்பணி மன்ற நிர்வாக இயக்குனர்கள், அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.