நேற்று 25.11.2015 வவுனியாவின் அரச அதிபராக பதவியேற்ற ரோகன புஷ்பகுமார அவர்கள் இன்றையதினம் வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலுக்கு இந்துமத வணக்க வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார் .
மேற்படி அரச அதிபரின் விஜயத்தின் போது ஆலயம் தொடர்பான ஆலயத்தின் சமூக பணிகள் தொடர்பாகவும் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார் . வவுனியா மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் நித்தியானந்தன் தலைமையில் மேற்படி விஜயம் இடம்பெற்றது .