வவுனியாவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு!!(படங்கள்)

387

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் மரணித்த மாவீரர்கள் மற்றும் பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று மாலை 6.05க்கு வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.பி.நடராஜா, ம.தியாகாராசா, பிரஜைகள் குழுத் தலைவர் தேவராசா, பிரஜைகள் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஆலய முன்றலில் ஒன்று கூடிய மக்கள் 6.03க்கு ஆலய மணியை ஒலிக்கப்பட்டு, சோக கீதம் ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

அதன்பின் தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்த வீரமறவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

  1 2 3 4 5 6 7 8P1010234 P1010239