வவுனியா சுந்தரபுரத்தில் வசிக்கும் மூன்று வறிய மாவீரர் குடும்பங்களுக்கு கனடாவில் வசிக்கும் ராம் சிவா அவர்களின் ராம் பவுன்டேசன் மூலம் தமிழ் விருட்சத்தால் நேற்று (27.11.2015) அரிசி, மா, சீனி, பருப்பு, கிழங்கு, டின்மீன் என ஒரு மாதத்துக்கு தேவையான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த மூன்று மாவீரர் குடும்பகளுக்குமான உலர் உணவு பொதிகளை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் நேரடியாக அவர்களின் இல்லங்களுக்கு சென்று வழங்கி வைத்தனர்.