வவுனியா மாவட்டத்திற்கான படைப்பாளிகள் உலகம் அறிமுக நிகழ்வு இன்று (28.11.2015) மாலை வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் சர்வதேச படைப்பாளிகள் உலகத்தின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் யோ.புரட்சி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.நா.பார்த்தீபன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு.இ.நித்தியானந்தன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் திரு.எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு.சந்திரகுமார், கவிஞர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு அறிமுகம் செய்து வைத்தனர்.
இந்நிகழ்வில் கலை இலக்கிய படைப்பாளிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளராக கவிஞர் மாணிக்கம் ஜெகன் தெரிவு செய்யப்பட்டார்.