வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய வருடாந்த இல்ல திறனாய்வுப் போட்டி பாடசாலையின் அதிபர் திரு.செ.சசிகுமார் தலைமையில் நேற்று (02.02.2016) நடைபெற்றது.
இன் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ம .தியாகராசா, இ.இந்திரராசா, கோட்டக்கல்வி அதிகாரி திரு.தா.அமிர்தலிங்கம், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.ரவிச்சந்திரன், பகுதி கிராமசேவையாளர் திரு.கனகலிங்கம், தலைவர் பழைய மாணவர் சங்கம் லண்டன் கிளை திரு.அ.லோகேஸ்வரன் மற்றும் அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.