குவைத்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவருக்கு பெரிய தொந்தி இருந்தமையால் விவாகரத்து செய்துள்ளார். தனது கணவரின் தொந்தி மிகப் பெரிதாக இருப்பதாகவும் அதை குறைப்பதற்கான உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு தான் கோரியதாகவும் அப்பெண் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
ஆனால், உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள அவரின் கணவர் விரும்பவில்லையாம். இதையடுத்து இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. விவாகரத்து செய்யுமாறு அப்பெண் விடுத்த கோரிக்கையையும் கணவர் நிராகரித்தார். அதையடுத்து நீதிமன்றத்தை நாடுவதற்கு தான் தீர்மானித்தாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
தனது கணவரின் பெரிய தொந்தி காரணமாக அவரால் திருமண வாழ்க்கையின் கடமைகளை முறையாக மேற்கொள்ள முடியவில்லை என நீதிமன்றில் அப்பெண் தெரிவித்தாரென குவைத் ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பல தவணை விசாரணைகளின் பின்னர் அப்பெண்ணுக்கு விவாகரத்துக்கான அனுமதி வழங்கியுள்ளது.