புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு சந்தை வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்க்ப்படும்!!

563

1 (12)

புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான சந்தை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கு விஷேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதிய பொருட்களை கண்டுபிடிப்பவர்களுக்கு தற்போதைய சந்தையில் எவ்வளவு தூரத்திற்கு வாய்யப்புக்கள் இருக்கின்றன என்பது குறித்து திட்டமிடப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்துடன் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு அரச வங்கிகளினூடாக விஷேட கடன் திட்டங்களை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். 2016ஆம் ஆண்டு புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.