வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று(10.02.2016) பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை அதிபர் சீ.மரியநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்தியகலாநிதி ப.யோகானந்த் (பழைய மாணவர், பொது வைத்தியசாலை-வவுனியா), சிறப்பு விருந்தினராக வே.குணரட்ணம், கௌரவ விருந்தினர்களாக சே.லக்சிகன்(பழைய மாணவர்), சி.ஸ்ரீயுகன் (பழைய மாணவர்), பழைய மாணவர் சங்கத் தலைவர் திருச்செல்வம் திருவருள் உட்பட பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இவ் விளையாட்டுப் போட்டியை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் திருச்செல்வம் திரேஸ்குமார் உடனிருந்தார்.