வவுனியா ஹர்த்தாலால் முழுமையாக ஸ்தம்பிதம் : இயல்பு நிலையும் பாதிப்பு!!(2ம் இணைப்பு)

286

 
கடந்த 16.02.2016 அன்று துஸ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலைசெய்யப்பட்ட சிறுமி ஹரிஸ்னவியின் கொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி வவுனியாவில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வவுனியா நகர் முழுவதும் உள்ள வியாபரிகள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி ஹர்த்தலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினர்.

அத்துடன் வவுனியாவின் சில இடங்களில் ரயர்கள் வீதிகளில் எரிக்கப்பட்டிருந்ததுடன், தூர இடங்களிற்கு செல்லும் பஸ்கள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டிருந்ததை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.

இன்று இடம்பெற்ற பூரண கடையடைப்பால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் வவுனியா பிரதேச செயலகம் மக்களின்றி வெறிச்சோடியுள்ளதையும் முற்றாக முடக்கப்பட்டிருந்ததையும் காணக் கூடியதாகவுள்ளது.

பொலிசார் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். எவ்வித வன்முறையும் இடம்பெறவில்லை. வவுனியா இ.போ.ச.சாலை பேரூந்துச்சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்ததை காணக் கூடியதாகவுள்ளது. உள்ளூருக்கான சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை. தனியார் பேரூந்துகளும் வெளிமாவட்டத்திற்கான சேவை மட்டுமே இடம்பெற்றுள்ளது.

தினச்சந்தை வெறிச்சோடிக்கிடந்ததை காண முடிந்துள்ளது. பாடசாலைகளில் ஆசிரியர்கள் சமூகமளித்திருந்தனர் எனினும் மாணவர்கள் இன்றி பாடசாலைகள் வெறிச்சோடியுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது. வீதிகளில் டயர் போட்டு எரிக்கப்பட்டிருந்ததையும் காணமுடிந்தள்ளது.

20160224_083410 20160224_083428 20160224_083442 20160224_083536 20160224_083545 20160224_084115 20160224_084129 20160224_084133 20160224_084304 20160224_084327 20160224_084454 20160224_084702 20160224_084705 20160224_084723 20160224_085124 20160224_085247 20160224_085315 20160224_085333 20160224_085344 20160224_085407 20160224_085442 20160224_085522 20160224_090354