கடந்த 16.02.2016 அன்று துஸ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலைசெய்யப்பட்ட சிறுமி ஹரிஸ்னவியின் கொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி வவுனியாவில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் வவுனியா நகர் முழுவதும் உள்ள வியாபரிகள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி ஹர்த்தலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினர்.
அத்துடன் வவுனியாவின் சில இடங்களில் ரயர்கள் வீதிகளில் எரிக்கப்பட்டிருந்ததுடன், தூர இடங்களிற்கு செல்லும் பஸ்கள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டிருந்ததை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
இன்று இடம்பெற்ற பூரண கடையடைப்பால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் வவுனியா பிரதேச செயலகம் மக்களின்றி வெறிச்சோடியுள்ளதையும் முற்றாக முடக்கப்பட்டிருந்ததையும் காணக் கூடியதாகவுள்ளது.
பொலிசார் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். எவ்வித வன்முறையும் இடம்பெறவில்லை. வவுனியா இ.போ.ச.சாலை பேரூந்துச்சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்ததை காணக் கூடியதாகவுள்ளது. உள்ளூருக்கான சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை. தனியார் பேரூந்துகளும் வெளிமாவட்டத்திற்கான சேவை மட்டுமே இடம்பெற்றுள்ளது.
தினச்சந்தை வெறிச்சோடிக்கிடந்ததை காண முடிந்துள்ளது. பாடசாலைகளில் ஆசிரியர்கள் சமூகமளித்திருந்தனர் எனினும் மாணவர்கள் இன்றி பாடசாலைகள் வெறிச்சோடியுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது. வீதிகளில் டயர் போட்டு எரிக்கப்பட்டிருந்ததையும் காணமுடிந்தள்ளது.