இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக கடந்த வெள்ளிக்கிழமை அனுஸ்டித்தனர்.
மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசு கிறிஸ்து பின்னர் ஞாயிறு அன்று உயிர்தெழுந்தார்.
இதனை நினைவுகூரும் முகமாக உயிர்த்த ஞாயிறு நிகழ்வுகள் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று (27.03.2016) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இன் நிகழ்வுகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்தியுடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.