1 கோடிக்கு நாய்க் குட்டிகள் வாங்கிய தொழிலதிபர்!!

316

DOg

பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஒரு கோடி ரூபாய்க்கு நாய் குட்டி வாங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சதீஷ் கடபோம் என்ற அந்த தொழிலதிபர் சீனாவின் பீஜீங்கில் கொரியன் தோசா மஸ்தீப் என்ற‌ அபூர்வ இனத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி நாய்க் குட்டிகளை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

விமானம் மூலம் பெங்களூருவுக்கு கொண்டுவரப்பட்ட அந்த நாய்க் குட்டிகளை ரோல்ஸ் ரோய்ஸ் காரில் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவர் சிகிச்சை அளித்தார். இதையடுத்து தொழிலதிபரின் பிரம்மாண்டமான வீட்டில் அந்த நாய்க் குட்டிகள் விளையாடி மகிழ்கின்றன.