பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவித்த ஐவருக்கு வவுனியா நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 25ம் திகதி வீதியினை புனரமைத்துத் தருமாறு கோரி வவுனியா நகரின் மத்தியில் ஏ9 வீதியின் போக்குவரத்தினை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐவருக்கு வவுனியா நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது
இரு பௌத்த மதகுருமார் உட்பட ஐவருக்கே இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.