வவுனியா திருநாவற்குளம் உமாமஸ்வரன் முன்பள்ளி சிறார்களின் புதுவருட நிகழ்வுகள் ஆசிரியர் திருமதி மீரா குணசீலன் தலைமையில் இன்று (27.05.2016) வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் நிகழ்வின் பிரதம அதிதிகளாக வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பு அதிதிகளாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) சிரேஷ்ட உறுப்பினர் முத்தையா கண்ணதாசன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும், திருநாவற்குளம் கிராம அபிவிருதிச்சங்கத்தின் பொருளாளருமான சு.காண்டீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் த.நிகேதன், உறுப்பினர் பி.கேர்சோன் ஆகியோருடன் தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய ஆசிரியை திருமதி சியாமா, முன்பள்ளி ஆசிரியர் செல்வி சபீதா தர்மலிங்கம், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மேற்படி முன்பள்ளியின் புதுவருட நிகழ்வு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) லண்டன் கிளை உறுப்பினர் தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன் ) அவர்களின் அனுசரணையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் அவரால் அன்பளிப்பு செய்யப்பட்ட அலுமாரியும் பிரதம அதிதிகளால் முன்பள்ளி ஆசிரியர்களிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.