பெங்களூரின் முதல் பெண் டாக்சி ஓட்டுனர் மரணம்!!

725

Taxi

பெங்களூர் நகரின் முதல் பெண் டாக்சி ஓட்டுனரும் உபேர் இந்தியா கோல் டாக்சி நிறுவனத்தின் முதல் பெண் ஓட்டுனருமான பாரதி பெங்களூரில் மரணமடைந்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் 39 வயதான வீராத் பாரதி. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு வேலை தேடி பெங்களூருக்கு வந்தார்.

பெங்களூரில் உள்ள நாகஷெட்டி ஹல்லி என்ற பகுதியில் வசித்து வந்த இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு கார் டிரைவிங் கற்றுக்கொண்டு சொந்தமாக கார் வாங்கி அவரே ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு உபேர் டாக்சி நிறுவனத்தில் ஓட்டுனராக பணியில் சேர்ந்தார்.

பெங்களூர் நகரின் முதல் பெண் டாக்சி டிரைவராகவும், உபேர் இந்தியா நிறுவனத்தின் முதல் பெண் டாக்சி டிரைவராகவும் இவர் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் பாரதி தனது வீட்டில் இறந்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டில் சென்ற பொலிசார், அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரது சடலத்தை மீட்டுள்ளனர்.

பாரதி இறந்தது தற்கொலையா அல்லது கொலையா என்ற இருவேறு கோணங்களில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறப்பதற்கு முன் பாரதி கடிதம் எதுவும் எழுதியிருக்கலாம் என்பதால் அவரது வீட்டில் பொலிசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் தற்கொலைக்குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. அதேசமயம் வெளியாட்கள் யாரும் உள்ளே வந்ததற்காக அறிகுறியும் தென்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.