சர்வதேச மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வவுனியா சமளங்குளம் மற்றும் ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள இளைஞர் யுவதிகளால் போதைப்பொருள் அற்ற எமது கிராமம் என்ற தொனிப்பொருளில் வீதி நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.
இவ் வீதி நாடகம் சமளங்குளம் மற்றும் ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள 5 கிராமங்களில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.









