கொலைகாரன் பின்தொடர்ந்து வந்ததை நேரில் பார்த்ததாக சுவாதியின் தோழி பரபரப்புத் தகவல்!!

1586

Swathi

பெண் பொறியியலாளர் சுவாதியை கொன்ற கொலைகாரன் பற்றி சுவாதியின் தோழி பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சுவாதியை கொன்ற கொலைகாரன் 2 நாட்கள் பின்தொடர்ந்து வந்ததை நேரில் பார்த்ததாக அவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியியலாளர் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. சுவாதி கொல்லப்பட்ட சம்பவம் பற்றி தினம்தினம் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

சுவாதியை கொன்ற கொலைகாரனின் கமரா உருவப் படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். பொலிஸார் வெளியிட்ட புகைப்படத்தில் இருக்கும் மர்மநபர்தான் சுவாதியை கொன்ற படுபாதக கொலையாளி என்று நுங்கம்பாக்கம் ரயில் நிலைய சிற்றுண்டிச்சாலை ஊழியரும், சுவாதியின் நெருங்கிய தோழியும் பொலிஸாரிடம் அடையாளம் காட்டியுள்ளனர்.

இதனால் புகைப்படத்தில் இருக்கும் மர்மநபர்தான் சுவாதியை கொன்ற கொலைகாரன் என்பது உறுதிபட தெரியவந்துள்ளது.

அந்த கொலைகாரன் பற்றி சுவாதியின் தோழி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரது வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நான் சுவாதி வேலைபார்க்கும் நிறுவனத்தில்தான் வேலை பார்க்கிறேன். சுவாதியை கொன்ற கொலைகாரனை நான் 2 நாட்கள் நேரில் பார்த்துள்ளேன்.

கடந்த 10ம் திகதியன்றும், 11ம் திகதியன்றும் நானும், சுவாதியோடு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தேன். அப்போது அந்த மர்மநபர் சுவாதியை பின்தொடர்ந்து வருவதை நான் பார்த்தேன்.

அந்த மர்ம நபர் என்னை பின்தொடர்ந்து வருகிறான். ஏன் என்று தெரியவில்லை. அவன் என்னிடம் என்னை உனக்கு தெரியவில்லையா என்று கேட்கிறான். ஆனால் உண்மையிலேயே அவனை எனக்கு யார் என்று தெரியவில்லை என்று சுவாதி என்னிடம் கூறினாள்.

இந்த விஷயத்தை லேசாக விடக்கூடாது அவனை கண்டிக்க வேண்டும் என்று நான் சுவாதியிடம் எச்சரித்தேன். அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சுவாதி என்னிடம் கூறினாள். ஆனால் அந்த படுபாவி சுவாதியை இந்த அளவுக்கு கொடூரமாக கொலை செய்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

அந்த பாவியை கைது செய்து பொலிஸார் கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும்.இவ்வாறு சுவாதியின் தோழி தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.

சுவாதியின் நண்பரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அவரும் சில திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். பொலிஸாரிடம் அவர் கூறியதாவது..

நானும், சுவாதியும் ஒரே கல்லூரியில் படித்தோம். நல்ல நண்பர்களாக பழகிவந்தோம். திருவல்லிக்கேணியில் உள்ள எனது வீட்டிற்கு கூட சுவாதி வந்திருக்கிறாள்.

இரக்க சிந்தனையுள்ள சுவாதி நல்ல மனம் படைத்தவள். யாருக்கும் தீங்கு செய்ய நினைக்க மாட்டாள். கடந்த 18ம் தேதியன்று சுவாதி, என்னிடம் செல்போனில் பேசினாள். அதுதான் அவள் கடைசியாக என்னிடம் பேசிய பேச்சு.

மர்மநபர் ஒருவன் என்னை பின் தொடர்ந்து வருகிறான். கடந்த 10-ந் தேதியன்றும், 11-ந் தேதியன்றும் அவன் என்னை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வந்தான் அவனை என்ன செய்வது என்று தெரியவில்லை என்று சுவாதி கூறினாள்.

அவனை யார் என்று அடையாளம் காட்டு நான் அவனை கண்டிக்கிறேன் என்று சுவாதியிடம் கூறினேன். அவன் அவ்வளவு பெரிய ஆளாக தெரியவில்லை. அவனை ஒன்றும் செய்யவேண்டாம். இந்த பிரச்சினையை விட்டுவிடு என்று சுவாதி அப்போது என்னிடம் கூறிவிட்டாள்.

நானும் அந்த பிரச்சினையை மறந்துவிட்டேன். சுவாதி கொலை செய்யப்படுவாள் என்று நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. சுவாதியை பின்தொடர்ந்த மர்ம நபர் இந்த அளவுக்கு கொடூரமாக கொலை செய்வான் என்றும் நினைக்கவில்லை.

அந்த படுபாவி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு சுவாதியின் நண்பர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனிப்படை பொலிஸார் கொலையாளியை கண்டுபிடித்து கைதுசெய்யும் முயற்சியில் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸ் கமிஷனர் டி.கே.இராஜேந்திரன் நேற்றும் இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.