சகல வகையான பீடைக்கொல்லிகளுக்கும் தடை – ஜனாதிபதி!!

639

intensive-farming-chemicals

சகல வகையான பீடைக்கொல்லிகளையும் நாட்டுக்கு இறக்குமதிசெய்தல், விற்பனைசெய்தல் மற்றும் பயன்படுத்துவதை தடைசெய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பீடைக்கொல்லி, கிருமிநாசினி மற்றும் இரசாயன பொருட்களை அதிகளவு பயன்படுத்துவதன் காரணமாக மக்களின் சுகாதார நிலைமைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கிளைபோசிட் பீடைக்கொல்லி உள்ளிட்ட சகல வகையான பீடைக்கொல்லிகளினதும் இறக்குமதியை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடைசெய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை மக்கள் சுகதேகிகளாக இருப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.