
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ஜீலை 29ம் திகதி நேரில் ஆஜராக வேண்டும் என மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பல்வேறு வங்கிகளின் மூலம் ரூ.9000 கோடி கடனை பெற்றி திருப்பி செலுத்தாமல் விஜய் மல்லையா லண்டனில் தங்கியுள்ளார்.
இவரை நாடு கடத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தேடப்படும் குற்றவாளி என சமீபத்தில் நீதிமன்றம் அறிவித்தது.இந்நிலையில் மும்பை சிறப்பு நீதிமன்றம், ஜூலை 29ம் திகதி விஜய் மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை அமலாக்கத்துறை பத்திரிக்கைகளின் மூலம் வெளியிட்டுள்ளது.




