புதிய ஆளுநரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்!!

560

business-04th-Sep-2014

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு புதிதாக நியமிக்கப்படுபவரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராகக் கடமையாற்றிய அர்ஜுன் மகேந்திரனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.