SAJ Relief Foundation ஏற்பாட்டில் புனித றமழானை மாதத்தினை முன்னிட்டு சமூக அபிவிருத்தியும் மதநல்லிணக்கமும் எனும் தொனிப்பொருளில் அவ்நிறுவனத்தின் தலைவர் முன்னால் பிரதேசசபை உறுப்பினருமாகிய அல்ஹாஜ் சாஜிடீன் (சமாதானநீதவான்) அவர்களின் விசேட பணிப்புரையின் கீழ் அந்நிறுவ செயலாளரும் சமாதானநீதவானும் கட்டளையமர்வு பெற்ற அதிகாரியும் ஆகிய சா.சர்ராஜ் தலைமையில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நோன்பு திறக்கும் வைபவம் (இப்தார்) சிறப்புற நடைபெற்றது.
இதன் போது பிரதம விருந்தினராக முன்னால் உதவிக்கல்விப் பணிப்பாளர் நாயகம் குத்துாஸ் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக முன்னால் உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் ஜனாப் சுபைர், பட்டானிச்சூர் ஜீம்மா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் அப்துல் சமட், பாடசாலை அதிபர் அல்ஹாஜ் றம்சீன் மற்றும் வவுனியா பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.































