பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் உமர் அக்மல். இவர் வெஸ்ட்இண்டீசில் நடைபெறும் கரீபியன் ´லீக்´ போட்டியில் விளையாட சென்றபோது விமானத்தில் சுய நினைவு இல்லாமல் மயங்கி விழுந்தார்.
ஆண்டிகுவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டது. வலிப்பு நோயால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து உமர் அக்மலுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. வெஸ்ட்இண்டீசில் இருக்கும் அவரை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.