லிபிய கடலில் மூழ்கிய படகு : 10 பெண்களின் சடலங்கள் மீட்பு!!

585

Boat accident

லிபிய கடற்பரப்பில் மூழ்கிய புகலிடக் கோரிக்கையாளர்களின் படகிலிருந்து 10 பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலி கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகில் நீர் புகுந்ததன் காரணமாக படகு மூழ்கியுள்ளதாகவும் இத்தாலி கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், 107 புகலிடக் கோரிக்கையாளர்களை காப்பாற்றும் முயற்சியில் இத்தாலி கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், படகு மூழ்கியதையடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

எவ்வாறாயினும், படகிலிருந்த ஏனைய 106 பேரும் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இத்தாலி கடற்படையின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 60,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் இத்தாலிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.