நீரில் மூழ்கி இருவர் பலி!!

586

death

மட்டக்களப்பில் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

வாகரை – மதுரங்கேனிக் குளம் ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மீன்பிடிப்பதற்காக ஆற்றுக் சென்ற 29 வயதான குறித்த இளைஞரே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளார்.

இதேவேளை, வாகரை – காயங்கேனி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார். மேலும் சிலருடன் கடலுக்கு நீராடச் சென்ற வேளையே அவர் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளார்.

சம்பவத்தில் கொழும்பு – 5 பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.