மட்டக்களப்பு – கல்லடி பழைய பாலத்தில் இருந்து பாய்ந்து சுமார் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தற்கொலை செய்த இளைஞன் மட்டக்களப்பு – கூழாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






