நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் விலங்குகளை வேட்டையாடி பேஸ்புக்கில் பிரசுரித்தவர்கள் 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வன விலங்குகளை வேட்டையாடி உணவாக்கினார் என இணையத்தளங்களில் வெளியான படங்களில் இந்த விலங்கு வேட்டையுடன் சம்பந்தப்பட்ட பிரதான நபரும் இதில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பன்வில பொலிஸார் இன்று காலை இந்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று தெல்தெனிய நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.




















