வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் தீபாவளி துடுப்பாட்ட போட்டித் தொடரை முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆரம்பித்து வைத்தார்.
வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தினால் வருடந்தோறும் தீபாவளி தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் நேற்று (03.07.2016) மாலை 2.00 மணியளவில் கோவில்குளம் இந்துக் கல்லூரி மைதானத்தில், கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு க.பார்த்தீபன் தலைமையில் வெகு சிறப்பாக ஆரம்பமானது.
இவ் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்ப போட்டியினை தொடக்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப போட்டியில் அல்-மதினா மற்றும் என்.சி.சி. விளையாட்டு கழகங்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் திரு கா.பார்த்தீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினர் மற்றும் கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், கழகத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.