இன்று நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்ற நிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை வைத்தியர்களும் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனால் நோயாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
எட்கா உடன்படிக்கை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் இன்று காலை 8.00மணிமுதல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இப் பணிப்புறக்கணிப்பு சம்பந்தமாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில்..
ஏவ்வித முன்னறிவித்தலின்றி இவ்வாறு வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுபட்டுவருவதானால் நாங்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. 12.00 மணிக்கு பின்னர் வருமாறு தெரிவிக்கின்றனர்.
வருத்தம் என்று தான் வைத்தியசாலைக்கு வருகின்றோம் எம்மை இவ்வாறு சிரமத்துக்குள்ளாக்கின்றனர். ஏனக்கு வயது 72 சுகயினம் காரணமாக கஸ்டத்தின் மத்தியிலும் முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்கு வந்தேன். மீண்டும் 12.00 மணிக்கு வைத்தியசாலைக்கு முச்சக்கரவண்டியில் வருவது என்றால் எங்கே செல்வது பணத்திற்கு? என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.
















