
மத்தள ராஜபக்ச வானூர்தி தளத்தை மீள இயக்க உள்ளுர் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகள் கோரப்பட்டுள்ளன.போக்குவரத்து அமைச்சின் தகவல்படி, இதற்கான விளம்பரம் அரசாங்க நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நீண்டகாலத்துக்கான முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.போக்குவரத்து அமைச்சின் விளம்பரப்படி மத்திய ராஜபக்ச வானூர்தி தளத்தில் முதலீட்டை மேற்கொள்ளும் நிறுவனங்கள், உள்ளுர் மற்றும் மூன்றாம் நாடுகளுக்கு சேவைகளை மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் இதற்கான விண்ணப்ப திகதி ஆகஸ்ட் மாதம் 12ம் திகதியுடன் முடிவடைகின்றது.




