
பாகுபலி வெற்றியால் உற்சாகத்தில் உள்ளார் தமன்னா. இவர் அடுத்து பாகுபலி-2, தர்மதுரை, தேவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் நடித்த அனைத்து படங்களிலுமே கஷ்டப்பட்டு தான் நடித்தேன், இதில் ஒரு சில படங்கள் தோல்வியடையும் போது மனதிற்கு சங்கடமாக இருக்கும்.
அந்த தயாரிப்பாளரை பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கும், அதனால், எப்போதும் முழுக்கதையையும் படித்து நன்றாக இருந்தால் தான் தற்போது தான் நடிக்கவே சம்மதிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.நடித்துவிட்டால் கடமை முடிந்தது என பல நடிகைகள் ஒதுங்கி செல்லும் நிலையில் தமன்னா தன் தயாரிப்பாளர்களுக்காக வருத்தப்படுவது பாராட்டத்தக்கது.





