வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸ ‘செமட்ட செவன’ தேசிய விடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 844 பயனாளிகளுக்கு இன்று (04.07.2016) காலை 11.00 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் உதவித்திட்டங்களை வழங்கி வைத்தார்.
இதன் போது ‘செமட்ட செவன’ தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 244 பயனாளிகளுக்கு 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் வரையிலான காசோலைகளையும் 400 பயனாளிகளுக்கு சீமந்து பக்கற்றுக்களும், 200 பயனாளிகளுக்கு வீட்டு உறுதிப்பத்திரங்களையும் வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் றோகண புஸ்பகுமார, வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கே.கே.காதர் மஸ்தான் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், சர்வமதத்தலைவர்கள், பயனாளிகள் என 700க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய தினம் (04.07.2016) காலை 9.00 மணியளவில் மன்னாரிலும் ‘செமட்ட செவன’ தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











































