பங்களாதேஷில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டவர்களில் 18 வயது நிரம்பிய இந்தியப் பெண்ணும் ஒருவராவார்.
விடுமுறையைக் கழிப்பதற்காக சென்ற இடத்தில் அவருக்கு இத்தகைய பரிதாப நிலை நேர்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் ஜெயின். தொழிலதிபரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக பங்களாதேஷில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவரது மகளான தாரிஷி ஜெயின் (18), அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
தனது விடுமுறையை பெற்றோருடன் கழிப்பதற்காக வங்கதேசத்துக்கு வந்திருந்த தாரிஷி ஜெயின், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.
அவரது உடல் இன்று இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கடும் சித்திரவதைகளுக்கு பின்னரே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.










