நீதிமன்றத்தின் முன் குழப்பம் விளைவித்த இருவர் கைது!!

639

Arrest

தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் கூடிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மற்றொருவரை துப்பாக்கியால் சுட முற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பிரதேச மக்களின் உதவியுடன் தம்புள்ளை நீதவான் நீதிமன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே இவர்கள் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர்களை தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.