
சமூக சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி மாநகர சபையின் சமூக சுகாதார உத்தியோகத்தரான 38 வயதுடைய அனுஷ தம்பதேனிய என்ற இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த மாதம் 25 ஆம் திகதியில் இருந்து தொடர் காய்ச்சலினால் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற டெங்கு நிகழ்ச்சித்திட்டத்தில் குறித்த நபர் பங்கு பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





